×

ஊத்துக்கோட்டையில் 500 நரிக்குறவர்களுக்கு உணவு

ஊத்துக்கோட்டை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தாமரைப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வியாபாரத்திற்கு  செய்ய முடியாமல் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் எஸ்.ஐக்கள்  சுரேஷ், வினோத்குமார், ஒன்றிய கவுன்சிலர் சரவணன் முன்னிலையில்  டிஎஸ்பி சந்திரதாசன், 500 நரிக்குறவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும்  ஊத்துக்கோட்டை பகுதியில் பாஜ நிர்வாகி மெய்யூர் சீனிவாசன் தலைமையில், உணவு, குடிநீர், முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Tags : Food , 500 foxes,Uduthukottai
× RELATED மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும்...