×

எரிசாராயம் குடித்த ரயில்வே ஊழியர்கள் உள்பட மூவர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் சிவசங்கரன் (40). படாளம் ரயில்வே கேட் கீப்பர். அதே  ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் பிரதீப்குமார் (30). ஒத்திவாக்கம் ரயில்வேகேட்டில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் ஆராயி என்பவரது மகன்  சிவராமன் (30. கார் டிரைவர். மூவரும் குடிப்பழக்கம் உடையவர்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. எனவே கள்ளசந்தையில் ₹100 மதிப்புள்ள குவாட்டரை ₹200 மற்றும் ₹300 கொடுத்து வாங்கி குடித்துள்ளனர். கடந்த 4 நாட்களாக குவாட்டர் ₹450க்கு விற்பனை செய்தனர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அந்த குவாட்டரும் கிடைக்கவில்லை. இதனால் திருக்கழுக்குன்றம் பகுதியில் எரிசாராயம் வாங்கி வந்து செங்கல்பட்டு அடுத்த படாளம்  பகுதியில் நேற்று  3 பேரும் குடித்துள்ளனர்.

 நேற்று மதியம்  3 பேருக்கும் கடுமையான வயிற்று வலி,  வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்மூலம் சேர்ந்தனர். மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து மூன்றுபேரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : railway employees , Three killed, including,railway,employees
× RELATED 250 ரயில்வே ஊழியர்கள் கைது