×

கார் மோதி காவலர் பலி

ஸ்ரீபெரும்புதூர்: கடலூரை சேர்ந்தவர் துரைராஜ் (29).  ஜாம்பஜார் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். எஸ்பிளனேடு, போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் சன்னிலாய்ட் (45). செய்யாறு, கலால் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று இருவரும், காரில் சுங்குவார்சத்திரம் அருகே சென்றபோது, காரின் முன்பக்க டயர் வெடித்து, சாலை நடுவே புதிதாக கட்டபட்டு வரும் பாலத்தின் மீது மோதியது. இதில் துரைராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த சன்னிலாய்ட்  ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



Tags : Car collision ,guard , Car collision, kills,guard
× RELATED கார் ஓட்டுநர் பலியான விவகாரத்தில்...