×

ஊரடங்கால் 22 நாட்கள் ரயில் சேவை ரத்து மார்ச் மாத சீசன் டிக்கெட் கால நீட்டிப்பு செய்யப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

சென்னை: தெற்கு ரயில்வே சார்பில், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - திருமால்பூர் தடத்தில் தினசரி 120க்கும் மேற்பட்ட ரயில்களும், மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி தடத்தில் 80க்கும் மேற்பட்ட ரயில்களும், மூர்மார்க்கெட் - அரக்கோணம் தடத்தில் 80க்கும் மேற்பட்ட ரயில்களும், கடற்கரை - வேளச்சேரி தடத்தில் 50க்கும் மேற்பட்ட ரயில்களும் இயக்கப்படுகின்றன. தினசரி 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பலர் மாதாந்திர சீசன் டிக்ெகட்டை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை ரயில்வே கோட்டத்தில் 160 கி.மீ வரை மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் இந்த சீசன் டிக்ெகட்டை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு மாதம் மற்றும் மூன்று மாதம் வரை பயன்படுத்தும் சீசன் டிக்கெட்டை பயன்படுத்தி வருகின்றனர்.  தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சீசன் டிக்கெட் பெற்றவர்கள் 22 நாட்களுக்கு அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் நாட்களில் இருந்து கூடுதலாக 22 நாட்களுக்கு ஏற்கனவே எடுத்த சீசன் டிக்கெட்டை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : passengers , Curfew, rail service cancellation, Corona
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...