காஷ்மீர்: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ சில தீவிரவாதிகள் முயற்சிப்பதை நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதையும் மீறி வீரர்கள் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.தீவிரவாதிகள் சுட்டதில், 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.