சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கலுங்குப்பட்டி கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மாடுபிடி பயிற்சி நடைபெற்றது. சம்பவ இடத்துக்கு போலீஸ் வந்தவுடன் வாகனங்களை விட்டுவிட்டு பயிற்சியில் ஈடுபட்டவர்கள் தப்பியோடினர். 10 இருசக்கர வாகனங்கள், ஒரு சரக்கு வேனை பறிமுதல் செய்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.