×

சிறப்பு சரக்கு ரயில் இயக்கம்

சென்னை:  சிறப்பு சரக்கு ரயில்களை இரண்டு நாட்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  யஷ்வந்–்த்பூரில் இருந்து கோரக்பூருக்கு பார்சல் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் நாளை மற்றும் ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு புறப்பட்டு ஏப்ரல் 7 மற்றும் 14ம் தேதிகளில் இரவு 11 மணிக்கு கோரக்பூர் சென்றடையும்.

அதேபோன்று கோரக்கபூரில் இருந்து யஷ்வந்பூருக்கு பார்சல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு யஷ்வந்பூருக்கு 10, 17ம் தேதிகளில் இரவு 9.45 மணிக்கு சென்றடைகிறது.  அதேபோன்று சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 8ம்தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் பார்சல் சிறப்பு ரயில் 10ம்தேதி பிற்பகல் 12.50 மணிக்கு கன்காரியா ரயில் நிலையத்தை சென்றடையும்.


Tags : Special freight train
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...