டெல்லி: பிரதமர் மோடி வேண்டுகோளின்படி நாளை இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்கும்போது தெருவிளக்குகளை நிறுத்தக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான இடங்களில் விளக்குகளை அணைக்க கூடாது, திடீரென விளக்கை அணைத்தால் மின் கட்டமைப்பில் பழுது ஏற்படும் என்ற தகவலால் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.