சென்னை: தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளால் பலருக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரிசி, முகக்கவசம் தருவதாகக் கூறி அரசியல்வாதிகள் கூட்டம் சேர்த்து சுற்றுகின்றனர். சமூக இடைவெளியைக் கூட பின்பற்றாமல் பொதுமக்களை அரசியல்வாதிகள் கூட்டுவதால் ஆபத்து ஏற்பட பல வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசியல்வாதிகளின் விளம்பர மோகத்தால் நடைபெறும் செயல்களை தடுத்து நிறுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.