×

விவசாய பணிக்கு டீசல் வாங்கி வரும்போது விவசாயியை மறித்து பைக் பறிமுதல்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த காயார் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகன் (38). விவசாயம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் நீலமேகன், தனது விவசாய மோட்டாருக்கு டீசல்  வாங்க நெல்லிக்குப்பம் சென்றார். அங்கிருந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். காட்டூர் பகுதியில் சென்றபோது, வாகன சோதனையில் ஈடுபட்ட காயார் எஸ்ஐ சுசீலா, நீலமேகனை மடக்கி விசாரித்தார். அப்போது, தனது விவசாய மோட்டாருக்கு டீசல் வாங்கி வருவதாக அவர் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த எஸ்ஐ சுசீலா, அவரது பைக்கை பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்கு அனுப்பினார். மேலும், வழக்குப்பதிவு செய்து விட்டோம். பைக்கை தர முடியாது என எஸ்ஐ சுசீலா கூறியதாக தெரிகிறது.


Tags : Diesel, agricultural work
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...