தாம்பரம்: கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், மாடம்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட மப்பேடு நரிக்குறவர்கள் காலனியில், பேரூராட்சி முன்னாள் தலைவர் நடராஜன் ஏற்பாட்டில், அங்குள்ள 100 நரிக்குறவர்கள் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், பால், பிஸ்கட், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட 18 வகையான பொருட்களை பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வழங்கினார். தொடர்ந்து, திருநீர்மலை பகுதியில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதியுடன் இணைந்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை டி.ஆர்.பாலு துவக்கி வைத்து, அப்பகுதியிலுள்ள கூலி தொழிலாளிகளுக்கு காய்கறிகள், அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கினார்.