‘ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை பெண்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக அடுத்த 3 மாதங்களுக்கு தலா ரூ.500 வழங்கப்படும்,’ என கடந்த 26ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, நேற்று முதல் தவணையாக 4.07 கோடி ஏழை பெண்களுக்கு அவர்களின் ஜன்தன் வங்கி கணக்கில் தலா ரூ.500 செலுத்தப்பட்டதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சக அதிகாரிகள் கூறுகையில் `ஏப்ரல் முதல் வார இறுதிக்குள் 20.39 கோடி பெண்களுக்கும் இந்த தொகை வழங்கப்பட்டு விடும்,’’ என்றனர்.