×

கொரோனா வைரஸ் எதிரொலி செக்போஸ்ட் அமைத்து ஊருக்குள் நுழைய தடை

அதிராம்பட்டினம்: கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக அதிராம்பட்டினம் அருகில் உள்ள கிராமத்தில் செக்போஸ்ட் அமைத்து ஊருக்குள் நுழைய கிராம மக்கள் தடை விதித்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ளது பழஞ்சூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதி கிராம நிர்வாகத்தினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக ஊரின் நுழைவு வாயிலில் செக்போஸ்ட் அமைத்து அந்த இடத்தில் போவோர், வருவோரை தணிக்கை செய்து வருகின்றனர்.

இத்தோடு வாகனங்களை தணிக்கை செய்து அந்த வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து அந்த வாகனங்களின் எண்களை பதிவு செய்கின்றனர்.ஒரு தடவை ஊருக்குள செல்லும் வாகனம் மற்றொரு தடவை செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்நியர்கள் தேவையில்லாமல் இந்த ஊருக்குள் நுழைய வாய்ப்பு இருக்காது என்பதே இந்த கிராம மக்களின் நம்பிக்கை. இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Coronavirus ,Setting , Checkpost
× RELATED மக்களவை தேர்தலை முன்னிட்டு...