×

திருவள்ளூரில் ஒருவருக்கு கொரோனா: குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை

திருவள்ளூர்: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள், இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லாத நிலையில், முதல் முறையாக டில்லி நிகழ்ச்சிக்கு சென்று வந்தவருக்கு கொரோனா இருப்பது   உறுதி செய்யப்பட்டுள்ளது.திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள பத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 62வயது நபர். இவர்  தப்ளிக் ஜமாஅத் கமிட்டி மாவட்ட தலைவராக உள்ளார். இவர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சிக்கு சென்று வந்தவரை  சுகாதாரத்துறை அதிகாரிகள், கடந்த 5 நாட்களுக்கு முன் பரிசோதனைக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி வைத்தனர். தற்போது பரிசோதனை முடிவில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை மாவட்ட நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் என 5 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்த நேற்று அழைத்துச் சென்றனர். அங்கு இவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Thiruvallur ,Corona ,families ,examination ,Families for Medical Examination , Corona, Thiruvallur, Medical examination , families
× RELATED திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளர்கள்...