×

பிறந்து 42 நாட்களில் பெண் குழந்தை பலி

நியூயார்க்: அமெரிக்காவில் பிறந்து 42 நாட்களே ஆன பெண் குழந்தையும் கொரோனாவுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணத்தில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 85 பேர் பலியாகி உள்ளனர். 3,557 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுளள்து. இந்நிலையில், ஹார்ட்போர்டு பகுதியை சேர்ந்த தம்பதியின் 6 வார பெண் குழந்தை, நேற்று முன்தினம் இரவு திடீரென இறந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், கனெக்டிகட் மாகாணத்தில் கொரோனா பாதிப்பால் இறந்த மிக இளம் வயது நபராக இந்த குழந்தை உள்ளது. முன்னதாக, 35 வயது ஆண் இறந்ததே இந்த மாகாணத்தில் பலியான இளம் நபராக அறியப்பட்டிருந்தார்.


Tags : birth , America, Corona, baby girl, kills
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா