மும்பையின் செம்பூரில் கொரோனா பாதித்தவர் பயன்படுத்திய படுக்கையையே பிரசவ வார்டிலும் மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்தியதால், பிறந்து மூன்று நாளேயான குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தையின் தாயாருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அப்பெண்ணின் உறவினர் மருத்துவமனை மீது புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.