×

திருச்சியிலிருந்து மலேசியா சென்ற 360 பேர்

திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுலா வந்த 300 பேர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இதையடுத்து, அவசரகால சேவையாக மலிண்டோ விமானம் மலேசியாவில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 10.35 மணிக்கு திருச்சி வந்து மீண்டும் இரவு 11.25 மணிக்கு மலேசியா புறப்பட்டு சென்றது. இதில் 179 பயணிகள் சென்றனர். இந்நிலையில் 2ம் கட்டமாக நேற்று காலை 9.30 மணிக்கு வந்த அந்த சிறப்பு விமானம் 10.35மணிக்கு மலேசியா புறப்பட்டது. இதில் 181 பயணிகள் சென்றனர்.


Tags : Trichy ,Malaysia , Trichy , Malaysia,CORONA
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...