×

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கொரோனாவை தடுக்க சிறப்பு யாகம்

திருப்போரூர்: கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, இந்து அறநிலையத் துறை உத்தரவின்பேரில் நேற்று திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பல்வேறு கோயில்களிலும் கடந்த சில நாட்களாக சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உள்ள உற்சவர் மண்டபத்தில் நேற்று கொரோனா வைரஸ் ஒழிப்பு மற்றும் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. குண்டத்தில் நெய் ஊற்றி, வேத மந்திரங்கள் ஓதி யாகம் நடத்தப்பட்டது. இதில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் தவிர, வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Tags : Tirupporeur Kandaswamy ,Special Corruption Prevention Coronation , Thirupporeur, Kandaswamy Temple, Corona, Special Yagam
× RELATED திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அருகே...