சென்னை: அவசர பயணத்திற்கு வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் பாஸ் வழங்கலாம் என்ற நடைமுறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பாஸ் வழங்கலாம் என்ற பழைய நடைமுறையே தொடரும். முதல்வர் பழனிசாமியின் உத்தரவை ஏற்று பழைய நடைமுறையே தொடர்கிறது என தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார். திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்டவற்றுக்காக அவசரகால பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.