சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 309 பேரில் 264 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்ற 1,103 பேருக்கும் சோதனை முடிந்து விட்டது. 1.103 பேரில் இன்னும் சிலருக்கு சோதனை முடிவுகள் வர வேண்டி இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.