நாகர்கோவில்: இஸ்லாமியர்களை அவதூறாக பேசியதற்காக இந்து மகாசபை மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க இஸ்லாமியரை விட்டு விலகி இருங்கள் என்று கூறியதை அடுத்து நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.