சென்னை: கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த தனியார் கல்லூரிகள், விடுதிகளை பயன்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், ஊரடங்கு உத்தரவால் நாடோடிகள், நடைபாதை வாசிகள், இருப்பிடம் உணவு இன்றி தவிக்கின்றனர் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.