சென்னை: ரூ.1000 உதவித்தொகை, ரேசன் பொருட்களை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார். கொரோனா பாதித்த ஒருவர் நியாயவிலைக் கடைக்கு வந்தால், பலருக்கு ஆபத்து என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.