டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார். மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த குடியரசுத் தலைவர், நாளை காணொலி காட்சி மூலம் நடக்கவுள்ள ஆலோசனையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பங்கேற்க உள்ளார்.