×

ராமநாதபுரத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 236ஆக உயர்வு!

சென்னை : தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியாகியுள்ள 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் கொரோனோவால் 234 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது. மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

ராமநாதபுரத்தில் நிலவரம் என்ன ?

ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியுடன் வருபவர்கள் அனுமதிக்கப்பட்டுரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதுவரை 2 பெண்கள் உட்பட 11 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரத்த பரிசோதனை அறிக்கையில் 2பெண்கள் உட்பட 9 பேருக்கு பாதிப்பில்லை. டில்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு முதற்கட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட சோதனையிலும் இருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர்.அருகில் உள்ளவர்கள் அனைவரும் கண்காணிக்கப்படவுள்ளனர்.இதனிடையே இன்று காலை தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Ramanathapuram , Paramakudi, Ramanathapuram, Corona, Infection, Confirmation, Delhi, Veeraragarao
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...