கொழும்பு: கடல்வழியாக இலங்கைக்கு கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்களை கடத்தியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேரை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து 500 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள், 500 கிலோ கொக்கெயினை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.