×

மார்ச் 10 முதல் 17 வரை ஃபீனிக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் : சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை : மார்ச் 10 முதல் 17ம் தேதி  வரை சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்துக்கு சென்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இங்குள்ள தோல் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றும் இரு பெண்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் பிரபல வணிக வளாகமான பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி அமைந்துள்ளது. அங்கு தோல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்த செய்த பெண் உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மார்ச் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை அந்த கடைக்கு சென்றவர்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அந்த நாட்களில் அந்த கடைக்குச் சென்றவர்கள் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Chennai Corporation Advice ,Phoenix Mall , Velachery, Phoenix, Madras Corporation, Infection, Corona
× RELATED சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84...