×

டெல்லியில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி : டெல்லியில் கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கை மீறும் நபர்களை தடுப்பதற்கு நாடு முழுவதும் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் போலீசார்  ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் தகவல் வெளியாகிவுள்ளது. இது குறித்து டெல்லி காவல் துணை ஆணையர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பிரதமர் மோடி 21 நாள்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார்.
இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் காவலர்கள் தடுப்புகள் வைத்து காவல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலைநகரில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தனிமைபடுத்தல் விதிகளை மீற காவலர்கள் அனுமதிக்கமாட்டார்கள்” என்றார்.

Tags : ISIS , Delhi, Corona, terrorists, virus, police, ISIS
× RELATED ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரம்: இசை...