கொரோனா தொற்று நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆம்புலன்ஸ் ஊழியர்கள். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவையில் உள்ள 17,000 ஓட்டுனர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு இரண்டு மாத ஊதியம் நிலுவையில் இருப்பதாகவும், நோயாளிகளைக் கொண்டு செல்லும்போது கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள போதிய முகக் கவசம், கையுறை, சானிடைசர் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தாங்கள் பணிபுரியும் நிறுவனமும், அரசும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்த அவர்கள் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி விட்டு வீடுகளுக்கு திரும்பினர். உ.பி.யில் ஒப்பந்தத்தின் கீழ் 102, 108 சேவையில் 4,500 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.