×

கேரளத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 7 பேருக்கு கேரளத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 245-ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala , Kerala, coronavirus, deaths
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...