தி.மலை: திருவண்ணாமலை தீப மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு படையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகியுள்ளது என கூறப்படுகிறது.