சென்னை: வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தானாகவே அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்றும், இறைச்சி, மீன் கடைகளில் சமூக இடைவெளி என்பது சவாலாக இருக்கிறது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது 25,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.