×

காஞ்சிபுரம், திருப்போரூர், உத்திரமேரூரில் எளிமையாக நடந்த 5 திருமணங்கள்

காஞ்சிபுரம்: கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னரே, திருமணம் உள்பட சுப நிகழ்ச்சிகளுக்கான நாட்கள் குறித்து, பலர் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இதையொட்டி, திருமணம் உள்பட சுப நிகழ்ச்சி களிலும் முன்அனுமதி பெற்று 20 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ள அரசு அனுமதித்தது. இதைதொடர்ந்து பலரும், குறைந்த உறவினர்கள் முன்னிலையில், திருமணங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த  20 பேர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிமையான முறையில் நேற்று திருமணம் நடந்தது. அதேபோல் சின்ன காஞ்சிபுரம் பகுதியில்,  பண்ருட்டி பகுதியை சேர்ந்த மணமகன் பிரசன்னா குடும்பத்தினர்  நேற்று முன்தினம் சிறப்பு அனுமதியுடன் காஞ்சிபுரம் வந்தனர். இதைதொடர்ந்து, காஞ்சிபுரத்தை சேர்ந்த மணமகள் ஷண்முகபிரியாவுக்கும், பிரசன்னாவுக்கும் நேற்று காலை அவரது ஓட்டு வீட்டில் உறவினர்கள் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டு எளிமையாக திருமணம் நடந்தது.

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் - முத்துமாரி, செங்கல்பட்டு மணிகண்டன் - கிருஷ்ணபிரியா, பெருங்களத்தூர் சங்கரன் - அபிராமி ஆகிய ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடந்தது. மணமக்கள் மற்றும் அவர்களது பெற்றோர் 4 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு, சிவாச்சாரியார் அருண்குமார் முன்னிலையில் கோயில் வளாகத்தில் திருமணம் நடந்தது.இதற்காக கோயிலின் பிரதான வாயிற்கதவு திறக்காமல், கொடி மரம் அமைந்துள்ள வட்ட மண்டபத்தின் கதவை திறந்து மணமக்களும், உறவினர்களும் அனுமதிக்கப்பட்டனர். திருமணம் முடிந்ததும் கோயிலுக்கு வெளியே 16 கால் மண்டபத்தில் காத்திருந்த உறவினர்கள், புதுமண தம்பதிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூரை சேர்ந்தவர் சுரேந்தர் (30). வால்பாறை அரசு மருத்துவமனை டாக்டர். கோவையை சேர்ந்தவர் ஸ்னேகா (29). புதுச்சேரி ஜிப்மர் டாக்டர். இவர்களுக்கு, நேற்று காலை தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த முடிவு செய்து, அதற்கான அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர்.இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், இவர்களது திருமணத்தை, அரசு விதிமுறைப்படி எளிமையாக நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை, உத்திரமேரூரில் உள்ள மணமகன் வீட்டில் 10 பேர் முன்னிலையில் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது.

Tags : weddings ,Kanchipuram ,Thiruppore ,Uthiramur. , 5 weddings, Kanchipuram, Thiruppore , Uthiramur
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்