×

தொலைபேசி எண் வெளியீடு அத்தியாவசிய தேவைகளுக்கு உதவ திமுக இளைஞரணி தயார்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அத்தியாவசிய தேவைகளுக்கு உதவ திமுக இளைஞரணி தயாரக உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா கொடிய வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்தநிலையில், வைரஸ் மற்ற நாடுகளை போல், அழித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளும் நிதி ஒதுக்கி மக்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்துள்ளனர்.ஆனால், 21 நாள் திடீர் ஊரடங்கு என்பது, பணக்காரர்களுக்கு எந்த பாதிப்புமில்லாமல் இருந்தாலும், ஏழை, எளிய மக்கள், தினக்கூலிகள் என பலரை வறுமையில் தள்ளி உள்ளது. ஊரடங்கு 6 நாள் முடிந்த நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மற்ற நாட்களுக்கு உணவிற்கு என்ன செய்வதென்று அறியாமல் வறுமை வீதிக்கு வர தொடங்கியுள்ளது.

அரசு அத்தியாவசிய தேவைக்கு, கடைகளை திறக்க அனுமதி வழங்கி இருந்தாலும். அதனை வாங்க பணம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்தநிலையில், இதனை அறிந்த பலர் தாமாக உதவ முன்வந்து சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா பேரிடரால் மத்திய-மாநில அரசுகள் பிறபித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில். அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவோர் 9361863559 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு உதவ திமுக இளைஞரணி நிர்வாகிகள் தயாரக உள்ளனர். இவ்வாறு அந்த டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருந்தது.

Tags : DMK ,Udayanidhi Stalin , DMK youth, ready ,help, essential needs
× RELATED தருமபுரி திமுக வேட்பாளர் மணியை...