×

சமூக இடைவெளியை கடைபிடித்த பொதுமக்கள்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் ஊரடங்கை  பொருட்படுத்தவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில்,   போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து  கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. பொதுமக்கள் வெளியில் வருவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதட்டூர்பேட்டை பொருத்தவரை பொதுமக்கள் சமூக பரவல் கடைபிடித்து வருகின்றனர். சாலைகளில் வந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. காய்கறி கடைகள் வாரச்சந்தை வளாகத்திற்கு மாற்றப்பட்டு சமூக விலகல் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது.


Tags : public ,Civilians , Civilians ,social gap
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...