×

கிருமி நாசினி தெளிப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில், செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு தலைமையில்  தாசில்தார் சீனிவாசன், டிஎஸ்பி சந்திரதாசன் முன்னிலையில் தேர்வாய் சிப்காட் தீயணைப்பு துறையினர் மூலம்  பேரூராட்சியில் உள்ள நாகலாபுரம் சாலை, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, ரெட்டி தெரு போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்றும் ஒலிபெருக்கி  மூலம் அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள சிறு தெருக்களுக்கு வியாபாரிகள் சங்கம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Tags : Antiseptic
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...