×

இந்தியாவை மிரட்டும் கொரோனா: டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நேற்று ஒரே நாள் இரவில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 85 பேர் லோக்நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லோக் நாயக் மருத்துவமனையில் தற்போது வரை 106 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  டெல்லியில் தற்போது வரை 49 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், 2 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1071-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1024-லிருந்து 1,071-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்த நிலையில் 100 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : India ,Delhi , Coronation threatens,India, 85 hospitalized,Delhi
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...