×

உலகில் முதன்முறையாக பூனைக்கு கொரோனா தொற்று: செல்ல பிராணிகளுக்கு கொரோனா பரவும் 3-வது சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பதிவு

கொரோனா வைரசின் தாக்கல் கண்டறியப்பட்டதில் இருந்து முதல் முறையாக பூனைக்கு கொரோனா பரவிய சம்பவம் பெல்ஜியம் நாட்டில் நடந்துள்ளது. மனிதர்களிடம் இருந்து செல்ல பிராணிகளுக்கு கொரோனா பரவும் மூன்றாவது சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பதிவாகியுள்ளது. ஏற்கனவே ஹாங்காங்கில் மனிதர்களிடம் இருந்து 2 நாய்களுக்கு கொரோனா பரவிய நிலையில் பெல்ஜியம் நாட்டில் ஒரு பூனைக்கு கொரோனா பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. covid-19 தொற்று பூனைகளில் கண்டறியப்படும் முதல் சம்பவம் இதுவாகும். அந்த பெண் மற்றும் பூனையின் அடையாளங்களை பெல்ஜியம் அரசு வெளியிடவில்லை.

ஆனால் பெல்ஜியம் அதிகாரிகள் தரப்பில் இந்த சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பிரென்ச் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டில் தேசிய சுகாதாரத்துறையின் வைரஸ் நோய்களின் பிரிவு தலைவர் இது தொடர்பாக கூறுவதாவது; ஒரு வாரத்திற்க்கு முன்பு கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட பெண் ஒருவரின் செல்ல பிராணியாக அந்த பூனை இருந்து வந்ததாகவும் இப்போது அந்த பூனைக்கும் கொரோனாவின் அறிகுறிகளான சுவாச பிரச்சனை, வயிற்று போக்கு, வாந்தி ஆகியவை ஏற்பட்டதாகவும், பின்னர் அந்த பூனைக்கு கொரோனா பரிசோதனை செய்த போது சோதனை முடிவில் அதற்க்கு கொரோனா தொற்று காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனாலும் இது போன்ற மிக அறிய சம்பவங்களை கொண்டு கொரோனா மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவுவதை பொதுவான ஒரு சம்பவமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் விலங்குகள் மூலம் இதுவரை கொரோனா மனிதர்களுக்கு பரவவில்லை. இதுவரை அவ்வாறு அபாயம் எங்கும் நடக்கவில்லை என்றாலும் மக்கள் தங்கள் விலங்குகளை அவற்றின் பாதுகாப்புக்காக எப்போதும் கவனித்து வர வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  முன்னதாக, உலக சுகாதார அமைப்பு நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை கொரோனா வைரஸ் தாக்காது என்று கூறிய நிலையில், சமீபத்தில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.

இருப்பினும், தற்போது வரை செல்லப் பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags : world ,incident ,Belgium , Cat, Corona, pet, Belgium
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்