டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுக்கப்பட்ட கடுமையான முடிவுகள் ஏழை மக்களை பாதிக்கும் என்பதை உணர்கிறேன் என்று தெரிவித்த பிரதமர் மோடி அதற்காக மன்னிப்பு கோரினார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள் என்று தெரிவித்தார். இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கொரோனா தடுப்பு பெரும் சவாலாக இருக்கும் என்று தெரிவித்தார்.