சென்னை: கொரோனா அச்சுறுத்தலால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று ஐஓசி தகவல் தெரிவித்துள்ளது. தற்போது எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு வாராது என உறுதி அளிக்கிறோம். மேலும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது என ஐஓசி கூறியுள்ளது.