×

தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் கடித்து குதறிய மூதாட்டி பரிதாபச் சாவு

போடி: தேனி மாவட்டம், போடி கருப்பசாமி கோயில் சாலையை சேர்ந்தவர் சுந்தர் (33, பெயர் மாற்றப்பட்டுள்ளது). வியாபாரி. தொழில் நிமித்தமாக இலங்கைக்கு சென்ற அவர், 10 நாட்களுக்கு முன் மதுரை வந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அவரை தனிமைப்படுத்தி போடியில் உள்ள அவரது வீட்டில் கண்காணிப்பில் வைத்தனர். தனிமைப்படுத்தலால் கோபத்தில் இருந்த இவர், நேற்று முன்தினம் மாலை திடீரென ஆடைகளை அவிழ்த்துப்போட்டு, வீட்டை விட்டு வெளியே நிர்வாணமாக ஓடினார்.

ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடியவர், பக்தசேவா தெருவில் நின்றிருந்த மூதாட்டி நாச்சியம்மாள் (70) என்பவரை கீழே தள்ளி கழுத்தில் கடித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போடி நகர் போலீசார், அவரை பிடித்து போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மூதாட்டி நாச்சியம்மாளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை நாச்சியம்மாள் பரிதாபமாக இறந்தார். போடி நகர் போலீசார் வழக்குப்பதிந்து சுந்தரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


Tags : Isolated teenager ,bite , adulthood
× RELATED ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில்...