×

வெளியில் நடமாடினால் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வழக்கு: திருச்சி போலீஸ் அதிரடி

திருச்சி: வெளியில் நடமாடினால் ட்ரோன் கேமரா மூலம் கண்டறிந்து வழக்கு பதிவு செய்ய திருச்சி போலீசார் அதிரடியில் இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தடையை மீறி சுற்றிய 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தெருக்களின் சந்துகளில் நடப்போரும், கூடி நின்று பேசுவோரின் கூட்டமும் குறையவில்லை. இதை கண்காணித்து குறைக்கும் நடவடிக்கையாக ரங்கம், கோட்டை, பொன்மலை, கண்டோன்மென்ட் ஆகிய 4 சரகத்தில் ‘ட்ரோன்’ கேமரா மூலம் கண்காணித்து வழக்கு பதியும் வகையில் மாநகர போலீசார் அதிரடியில் இறங்கியுள்ளனர்.

ட்ரோன் எனப்படும் ஆளில்லா கண்காணிப்பு கேமராவை பறக்க விட்டு அதன்மூலம் மானிட்டரில் தெருக்களில் கூடுவோரை கண்டுபிடித்து அங்கு போலீசார் சென்று அவர்கள் மேல் வழக்கு போடவும் முடிவு செய்துள்ளனர். இதன்படி நேற்று தில்லைநகர் பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லும் போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி வழக்கு பதிந்து வருகின்றனர்.

Tags : Trichy Police Action ,Trichy , Trichy Police,Action
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்