மதுரை: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுரை நெல்பேட்டையில் கறி வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. சமூக பரவலால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இறைச்சி வாங்க மக்கள் படையெடுத்துள்ளனர். நெல்பேட்டையில் கறி, மீன், வாங்க நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டுள்ளனர்.