×

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 42 ஆனது: ஒரேநாளில் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 13,233 படுக்கைகள் உள்ளன. இதில் 227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,500 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 1,252 பேருக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

இன்னும் 208 ரத்த மாதிரிகளின் முடிவுகள் பரிசோதனையில் உள்ளது.  நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 45 வயது ஆண் மற்றும் சென்னையைச் சேர்ந்த 21 இளைஞர் ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் இருந்து கும்பகோணம் வந்த 42 வயது ஆணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் பிரிட்டனில் இருந்து வந்த காட்பாடியைச் சேர்ந்த 49 வயது நபருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபருக்கு ெகாரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதன்படி தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Tamil Nadu ,Nadu , Tamilnadu, Corona
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...