டெல்லி: டெல்லி ஆனந்தவிஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். டெல்லியில் தங்கி வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவும் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஏராளமானோர் குவிந்தனர்.