×

கொரோனா பரவுவதை தடுக்க 2,642 கைதிகள் ஜாமீனில் விடுதலை: அமைச்சர் சி.வி சண்முகம் தகவல்

சென்னை: தமிழக சிறையில் உள்ள 2,642 விசாரணை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பீதியில் விசாரணை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும்போது, ‘‘பரோலில் வெளியே சென்ற கைதிகளுக்கு பரோல் நீட்டிப்பு செய்வது தொடர்பாகவும், தற்போது பரோல் கேட்கும் கைதிகளை அவர்களின் குற்றத்தன்மையை ஆராய்ந்து பரோல் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. வெளியிலிருந்து சிறைக்கு வரும் கைதிகள் உரிய மருத்துவ பரிசோதனைகளுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தமிழக சிறையில் 2,642 கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

Tags : CV Shanmugam ,prisoners ,corona spread , Corona b, 2,642 prisoners, Minister CV Shanmugam
× RELATED பாமகவை கூட்டணியில் இழுக்க அதிமுக இறுதிக்கட்ட முயற்சி!