×

கால அவகாசம் முடிந்த நுகர்வோர் ஏப்ரல் 14ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை: மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்த ஏப்ரல் 14ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து மின்சாரவாரியம் வெளியிட்ட அறிக்கை: கோவிட்-19 வைரஸ் பரவுதலால் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக, தாழ்வழுத்த நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களின் மின்னிணைப்புகளுக்கு மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை  செலுத்துவதற்கான கெடு நாள் கடந்த 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை இருக்குமாயின், அதற்கான தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு மறு இணைப்புக் கட்டணமின்றி ஏப்ரல் 14ம் தேதி வரை கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.



Tags : Consumers ,Electricity Board ,Electricity Board Announcement , Consumer, Electricity, Electricity Board, Corona Virus
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி