சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச்சென்ற லாரிகள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவர்கள் உணவின்றி தவிக்கும் நிலை கவலை அளிக்கிறது. அரசுகள் அவர்களுக்கு உதவு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.