×

இடநெருக்கடியில் செயல்பட்டதால் தனியார் பள்ளி மைதானத்தில் காய்கறி மார்க்கெட் மாற்றம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே, இடநெருக்கடியாக செயல்பட்ட மார்க்கெட், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்துக்கு மாற்றி கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டார். தமிழக அரசு, தற்போது கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க, தற்போது இயங்கும் காய்கறி மார்க்கெட்டுகளை விரிவான மைதானங்களுக்கு மாற்ற அறிவுறுத்தியது. இதையடுத்து கலெக்டர் ஜான்லூயிஸ், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள காய்கறி மார்க்கெட், காந்தி சாலையில் உள்ள நடைபாதை கடைகள், அங்காடிகள் ஆகியவற்றை நேற்று காலை ஆய்வு செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார். அதன்படி காய்கறி மார்கெட் நேற்று மாலை மாற்றப்பட்டது.  வாடிக்கையாளர்கள் இடைவெளியுடன், கூட்டம் சேராமல் இருக்க வேண்டும் என கடைக்காரர்களிடம் கூறினார். இதை கடைபிடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கடைகளை அப்புறப்படுத்த  காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

Tags : Vegetable Market Transformation on Private School Ground Private School Ground , Private School Ground, Corona Virus, Vegetable Market Transformation
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...