×

கொரோனாவுக்கு பயந்து தனிமையில் இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் சோப்பு தயாரிக்கிறார்

சென்னை: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வர மறுக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலகினர், தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி பாதுகாத்து வருகின்றனர். பெரும்பாலான நடிகைகள் வெளியே ஜிம்முக்கு சென்று வர முடியாத காரணத்தால், வீட்டு மொட்டை மாடியில் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் தீவிர உடற்பயிற்சி செய்து வருகின்றனர். நடிகை சஞ்சிதா ஷெட்டி, துடைப்பம் வைத்து வீடு முழுக்க துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஜோக்கர் பட நடிகை ரம்யா பாண்டியன், வீட்டில் தன் அம்மாவுக்கு உதவியாக சமையல் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பணியாளர்கள் வராததால், சமையல் செய்த பாத்திரங்களை கழுவி, அவற்றை அலமாரியில் அடுக்கி வைப்பதை வீடியோவாக்கி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

கமல்ஹாசன், சரிகா, அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் தனித்தனி வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றனர். ஸ்ருதிஹாசன் பணியாளர்கள் உதவியின்றி தனியாக தங்கியிருக்கிறார். சமைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அவர், இயற்கை முறையில் சோப்பு தயாரிக்கிறார். அதற்கான பார்முலாக்களை சோப்பு நிறுவனம் ஒன்றிடம் கேட்டறிந்த அவர், இதுவரை 10 சோப்புகள் தயாரித்துள்ளார். அடிக்கடி கை கழுவ இந்த சோப்பை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Sruthihasan , Corona, Actress Sruthihasan, Soap
× RELATED ‘கமல், சரிகா பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே’: சொல்கிறார் ஸ்ருதிஹாசன்